வங்கிகள் செய்வது முட்டாள்தனம் என கூறிய விஜய் மல்லையா!. இன்னும் 5 நாட்களில் அவருக்கு வரும் நெருக்கடி!.
வங்கிகள் செய்வது முட்டாள்தனம் என கூறிய விஜய் மல்லையா!. இன்னும் 5 நாட்களில் அவருக்கு வரும் நெருக்கடி!.
இந்தியாவில் உள்ள பலவங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார் என்பது தெரியவந்தது.
லண்டனில் உள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவருவது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை வரும் 10 ஆம் தேதி அளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த விஜய் மல்லையா, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை முழுவதும் தந்து விடுவதாகவும், தயவு செய்து வங்கிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், வங்கிகள் ஏற்க மறுத்தால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து மற்றொரு ட்விட்டர் பதிவில் விஜய் மல்லையா, வழக்கமான முட்டாள்தனம் இது, 2016 முதலே நான் பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
English Summary
vijay mallaya talk about bank