ஈவ்டீசிங்கை தடுத்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்! நடு ரோட்டில் நிர்வாணமாக இழுத்து சென்ற கொடூரர்கள்!
UP Woman eve teasing in 3 boys
உத்தரபிரதேச மாநிலம் கோபிகஞ்ச் மாவட்டத்தில் பதோனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பெண்களை ஒரு கும்பல் அடிக்கடி ஈவ்டீசிங் செய்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று இக்கும்பலை சேர்ந்த லால்சந்த் யாதவ் என்பவர் ஒரு பெண்ணை ஈவ்டீசிங் செய்தர். அதே பகுதியை சேர்ந்த நெசவு தொழில் செய்யும் பெண் தடுத்து தட்டிக் கேட்டார்.
இதனால் ஈவ்டீசிங் செய்த லால்சந்த் யாதவ் ஆத்திரம் அடைந்தார். தனது கூட்டாளிகள் 3 பேருடன் அப் பெண்ணின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தனர். அங்கு தனியாக இருந்த பெண்ணை அவர்கள் அடித்து உதைத்தனர்.
பின்னர் அவரது உடலில் இருந்த ஆடைகளை வலுக்கட்டாயமாக அகற்றி நிர்வாண மாக்கினர். அவரை கிராமத்தில் ஊர்வலமாக இழுத்துச் சென்று அவமானப்படுத்தினர். இந்த கொடூர செயலை கிராமத்தினர் சிலர் ஈவு இரக்கமின்றி தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்றதாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
UP Woman eve teasing in 3 boys