சாப்பாடு வாங்குவதில் போட்டி - ஆத்திரத்தில் வாலிபர் அடித்துக் கொலை.! - Seithipunal
Seithipunal


சாப்பாடு வாங்குவதில் போட்டி - ஆத்திரத்தில் வாலிபர் அடித்துக் கொலை.!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகர் செம்பூர் பகுதியில் உள்ள ஓட்டல்-பாரில் நேற்று முன்தினம் இரவு அனில் ரந்வே என்ற வாலிபர் உணவு வாங்க சென்றார். அங்கு அவருக்கும், மற்ற இரண்டு பேருக்கும் இடையே யார் முதலில் உணவு வாங்குவது என்பதில் மோதல் ஏற்பட்டது. 

அப்போது, ஆத்திரமடைந்த மற்ற இரண்டு பேரும் அருகிலிருந்த இரும்பு கம்பியை கொண்டு அனில் ரந்வேவை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். உடனே அவர்கள் இரண்டு பேரும் தப்பியோடினர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீசார் விரைந்து வந்து வாலிபரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாலிபரை பரிசோதனை  செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து வாலிபரை அடித்து கொலை செய்த இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for kill young man in mumbai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->