தலையில் காயத்துடன் வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்.,மருத்துவரின் கவனக்குறைவு ..!
தலையில் காயத்துடன் வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்.,
டெல்லி : டெல்லியில் தலையில் காயத்துடன் வந்தவருக்கு கவன குறைவால் மருத்துவர் காலில் அறுவை சிகிச்சை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீஜேந்திர தியாகி என்பவருக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது.அந்த விபத்து காரணமாக அவரது தலையிலும் முகத்திலும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.அதனால் சுஷ்ருதா ட்ராமா மையம் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட அதே வார்டில் வீரேந்திர என்பவரும் காலில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்த நிலையில் பேரில் குழப்பம் அடைந்த மருத்துவர் தலையில் காயமடைந்த விஜேந்திராவிற்கு கால் எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரிய அளவு உடல்நலம் பாதிப்பின்றி சிறு காயங்களுக்காக அனுமதிக்கப்பட்ட விஜேந்திரா தற்போது நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
English Summary
The wounded in the head injury, the careless doctor