தலைநகரம் " டெல்லி " என்பது தெரியாத இளம் தலைமுறையினர் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
தலைநகரம் " டெல்லி " என்பது தெரியாத இளம் தலைமுறையினர் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
தலைநகரம் " டெல்லி " என்பது தெரியாத இளம் தலைமுறையினர் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
கிராமப்புறங்களில் 14 முதல் 18 வயது கொண்ட இளைய தலைமுறையினரில் 36 சதவீதம் பேருக்கு நாட்டின் தலைநகர் டெல்லி என்பதுதெரியவில்லை என தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அரசு சாரா தொண்டு நிறுவனமான ‘பிரதம்’ , நாடுமுழுவதும் 24 மாநிலங்களில் 28 மாவட்டங்களை தேர்வு செய்து அங்கு ஆய்வு நடத்தியது. 14 முதல் 18 வயதிலான குழந்தைகளின் கல்வித்தரம், அவர்கள் புரிந்து கொள்ளும்விதம், வாசிக்கும் திறன் உள்ளிட்ட அம்சங்கள்தொடர்பாக விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் திரட்டப்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.கல்வி விவரம் தொடர்பான அந்தஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கிராமப்புறங்களில் பெரும்பாலான இளைஞர்களுக்கு முறையான கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆண்களில் 28 சதவீதம் பேர்பள்ளிகளில் சேர்வதில்லை. அதேசமயம் பெண்களில் 32 சதவீதம் பேர் பள்ளிகளில் சேர்வதில்லை. இதுமட்டுமின்றி மாணவ,மாணவியருக்கு தரமான கல்வி வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
14 வயது முதல் 18 வயது கொண்ட இளைய தலைமுறையினரில், 36 சதவீதம் பேருக்கு டெல்லி நாட்டின் தலைநகர் என்பதுதெரியவில்லை. 14 சதவீதம் பேருக்கு இந்திய வரைப்படத்தை அடையாளம் காண முடியவில்லை.
அதேசமயம் 79 சதவீதம் பேர் தாங்கள் வசிக்கும் மாநிலத்தை சரியாக அடையாளம் காண முடிகிறது. அதுபோலவே 42 சதவீதம் பேருக்குவரைபடத்தில் தங்கள் மாநிலத்தை சரியாக காண்பித்து உறுதிபடுத்த முடிகிறது.
25 சதவீதம் பேருக்கு தாய்மொழியில் தங்கள் பாடப்புத்தகத்தை சரியாக வாசிக்க தெரியவில்லை. 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்குஎண்களில் ஒன்றை மற்றும் இரட்டை இலக்கத்திற்கு வித்தியாசம் தெரியவில்லை. 43 சதவீதம் பேர் மட்டுமே எண்ணகளின் இலக்கத்தைசரியாக குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது. 14 வயது குழந்தைகளில், 53 சதவீதம் பேருக்கு ஆங்கிலத்தை வாசிக்க முடிகிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The unknown young generation of our capital..the shock Report