ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்களுக்கு நேர்ந்த கதி: மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!
மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இன்றைய காலகட்டத்தில் அவசர அவசரமாக பயணிக்கும் நாம்., அதனால் ஏற்படும் விபரீதங்களை பற்றி யோசிப்பதில்லை.
அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்கள் ரயிலில் அடிபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மும்மை நகரின் 'மால்ட்' என்ற பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை பணிக்கு செல்வோர் கடந்து செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் நான்கு பெண்கள் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துள்ளது.
ரயில் வருவதை அந்த நான்கு பெண்களும் சரியாக கவனிக்கவில்லை என தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து, அவர்கள் மீது ரயில் மோதியது. ரயிலில் சிக்கிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர். ஒரு பெண் வேகமாக தூக்கி எறியப்பட்டார்.
அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mumbai women crossing railway track