பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக கூறிய பெண்ணால் நேர்ந்த விளைவு!
பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக கூறிய பெண்ணால் நேர்ந்த விளைவு!
மும்பையில் இருந்து லக்னோ வழியாக டெல்லிக்கு இண்டிகோ 6E 3612 என்ற விமானம் காலை 06.05 மணிக்கு இயக்கப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல் அந்த இண்டிகோ விமானம் மும்பை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தது. பின்னர், அந்த விமானம் பயணிகள் அனைவரும் ஏறிய பிறகு மேல் நோக்கி புறப்பட்டது.
இந்நிலையில், அந்த விமானத்தில் ஏறவேண்டிய பயணி ஒருவர், விமான கவுண்டரில் இருந்து அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பரபரப்புடன் கூச்சலிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இண்டிகோ ஊழியர்கள், உடனடியாக விமானத்தை தரையிறக்குமாறு கூறினார்.
பின்னர், தரை இறக்கிய விமானத்தை தனி இடத்துக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தினர். போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய சோதனையில், வெடிகுண்டு எதுவும் இல்லை என கண்டறிந்தனர். இதையடுத்து, இண்டிகோ விமானம் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதனிடையே, வெடிகுண்டு இருப்பதாக கூறிய அந்த பெண்ணிடம், போலீசார் விசாரித்த போது, அவர் மனநிலை சரியில்லாதவர் போல் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
English Summary
The result of a woman who said she had a bomb in a plane flying!