தமிழகத்தில் வந்தது புதிய கலாச்சாரம்!. இனி மிருகங்களையும் கற்பழிப்பார்கள்!. இதை நிறுத்தியே ஆகவேண்டும்!.
அயல்நாட்டில் உள்ள பாம்பு விஷத்தை போதையாக்கும் பழக்கம் தமிழகத்திலும் தொற்றி கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது, கஞ்சா, ஹெராயின், அபின் போன்ற போதை பொருட்களைவிட பாம்பு விஷம் அதிக போதை தருவதாலேயே இளைஞர்கள் இதை நாடுவதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் அயல்நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.
நாளைடைவில் டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் இரவு பார்ட்டியில் மட்டும் அரங்கேறி வந்த இந்த கொடிய கலாச்சாரம் தற்போது தமிழகத்திற்கும் வந்து இளைஞர்களை சீரழித்து வருகிறது.
இதை நிரூபிக்கும் வகையில் திருவண்ணாமலையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆன்மீக ஆய்வுக்கு தமிழகம் வந்த ரஷ்ய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் பாம்பு கடி போதை விஷ விவகாரம் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
பாம்பை நேரடியாக நாக்கில் கொத்த வைத்து விஷத்தை ஏற்றி கொள்ளும் இளைஞர்கள், பாம்பு விஷத்திலிருந்து தயாரிக்கப்படும் பவுடரையும் பயன்படுத்துகிறார்கள்.
குளிர்பானம் அல்லது மதுவில் பாம்பு விஷத்தை கலந்து குடித்தால் குறைந்தபட்சம் 7 மணி நேரம் முதல் அதிகபட்சம் ஒரு வாரம் வரை போதையில் இருப்பார்களாம். இதன் விலை சாதாரண போதை போர்ட்களைவிட விட மிக அதிகமாக விற்கப்படுகிறதாம்.
அதிலும் நாகபாம்பு விஷ பவுடருக்கு தான் அதிக விலை என கூறுகின்றனர். உடல் திறன் அற்றவர்கள் இதை பயன்படுத்தினால் உடனடியாக மரணம் நிச்சயமாம். இதை முற்றிலும் நிறுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
English Summary
The practice of poisoning poison in a foreign country has shocked Tamil Nadu.