5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..,உயிரோட தீ வைத்த அரக்கர்கள்..!
5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..
அசாம் மாநிலம் நாகோன் நகரில் 5-ம் வகுப்பு மாணவி ஒருவரை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்து கொலை செய்ததுள்ளனர்..இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சாக்கிர் ஹுசைன் மற்றும் இரண்டு சிறுவர்கள் இந்த கொடூரத்தை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
மாணவி வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தை தனக்கு சாதமாக்கிக்கொண்ட சாகிர் ஹுசைன் ,வீட்டுக்குள் நுழைந்துள்ளான் . முதலில் சாகிர் ஹுசைன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.அதன் பிறகு 2 சிறுவர்களும் சேர்ந்து மூவரும் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.
பின்னர் இந்த விஷயம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த மாணவி மீது மண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். உயிருக்குப்போராடிய நிலையில் அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் 80 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
இதற்கு காரணமாக இருந்தத இரண்டு மைனர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தகவல் அறிந்த சாக்கிர் ஹுசைன் தலைமறைவாகிவிட்டான். இவனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
English Summary
The horror of a 5-year-old girl,burn it alive