தீயில் கருகி பிணமாக கிடந்த பிரபல சீரியல் நடிகை.,இது கொலையா ?தற்கொலையா ? - Seithipunal
Seithipunal


கேரளாவில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

கேரள மாநிலத்தை சேர்ந்தவர்   கவிதா.இவர் மலையாள தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரது கணவரும் பெங்களூரில் வேலை பார்த்து அங்கேயே  வசித்து வருகிறார்.

malayala serial actresss kavitha burning க்கான பட முடிவு

இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது அதனால் கணவனை பிரிந்து கவிதா தனது மகளுடன் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலாம்பூரில் வசித்து வந்துள்ளார். 


இந்நிலையில் அழகு நிலையம் தொடங்க ஆசைப்பட்ட கவிதா பணம் சேர்த்து வைத்துள்ளார் ஆனால் போதுமான பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் கவிதா தனது  வீட்டில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கதவு உள்பக்கம் தாழ் போடப்பட்டு இருந்தது,அதோடு கவிதாவே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் இருந்துள்ளது.


 
ஆனால் எறிந்த நிலையில் உள்ள கவிதாவின் கையில் மின்சார வயர் இருந்துள்ளது. மேலும் அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதற்கான தடயங்களும் இருந்தது. இதனால் கொலையா இல்லை தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The famous television actress who was dead in a burning state


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->