நிபா வைரஸ் பரவ இவை காரணம் இல்லையா? வெளியான அதிர்ச்சி தகவல்.,அச்சத்தில் மக்கள்..!
நிபா வைரஸ் பரவ இவை காரணம் இல்லை
நிபா வைரஸ் பரவ வவ்வால்கள் காரணம் அல்ல என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இத்தகைய நிபா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறுதியில் மூளைச்சாவு அல்லது உயிரிழப்பு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த நிபா வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இது விரைவாக பரவி வருகிறது
இந்நிலையில் இது வவ்வால்கள் மூலம் பரவும் நோய் . வவ்வால் மூலம் வைரஸ் தாக்கிய மரத்தில் உள்ள பழத்தை மனிதர்கள் சாப்பிடுவதால் இது பரவும் என தகவல் வெளியானது.
அதனால் ‘நிபா’ வைரஸ் தாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வவ்வால்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஆய்வின் முடிவில் ‘நிபா’ வைரஸ் பரவலுக்கு காரணம் வவ்வால்கள் அல்ல என்று தெரிய வந்துள்ளது.
அதனால் இந்த நோயை குணப்படுத்துவது எப்படி என தெரியாமல் மருத்துவர்கள் திணறி வருகிறார்.
மேலும் நிபா வைரஸ் பரவுவதற்கான காரணம் குறித்து கண்டறிய மத்திய சுகாதாரத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
English Summary
that was not a reason to spread the Nipah virus shocking information