#ஜம்மு காஷ்மீர் || இரு வேறு பகுதிகளில் என்கவுண்டர் - பயங்கரவாதி சுட்டுக்கொலை - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மற்றும் ரஜோரி மாவட்டங்களில் இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்கள் நடந்து வரும் நிலையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் குஞ்சார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் குஞ்சார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வரும் நிலையில் 2 முதல் 3 பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல், காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, ரஜோரி மாவட்டத்தின் கந்தி வன பகுதியில் மற்றொரு என்கவுண்ட்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorist killed in encounter in Jammu Kashmir baramulla


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->