ராணுவ வீரர்கள் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குறியது - ராகுல் காந்தி!!
Terrorist attack on soldiers vehicle is very shameful Rahul Gandhi
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர் வனப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் தப்பி ஓடி உள்ளனர்.இந்த பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூடு தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தாலே அனைவரும் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் வீரமரணம் அடைந்தார் மற்றொரு நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கண்டனத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குறியது. வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற வீரர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Terrorist attack on soldiers vehicle is very shameful Rahul Gandhi