காஷ்மீர் தாக்குதல்! தற்கொலைபடை பயங்கரவாதி ஆதில் தாக்குதலுக்கு முன் வெளியிட்ட பகீர் வீடியோ.! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று  துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதக் கும்பல்,  350 கிலோ எடை கொண்ட வெடி மருந்துகளுடன், தற்கொலைப் படை லாரியைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்தது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு, இந்திய துணை ராணுவத்தினர் 44 பேர் பலியானர்.

இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட “ஜெய்ஷ் இ முகமது” என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும்  நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த தற்கொலைப் படை பயங்கராவதி அதில் அகமது தர் ஆவார்.

அதில் அகமது தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் குந்திபார்க் கிராமத்தில் வசித்து வந்தவர். 22 வயது நிறைந்த அவர் கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூலை மாதம் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு  பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தாக்குதலுக்கு முன்னர்  அவர் பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் பெயர் அதில் அகமது. நான் ஒரு வருடத்திற்கு முன்பு ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இணைந்தேன். ஒரு வருடம் காத்திருந்த பிறகு இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்தக் வீடியோ உங்களை வந்தடையும்போது நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பேன். இதுதான் காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய கடைசி செய்தி.

காஷ்மீரிகள் யுத்தத்துக்கு தயாராகி, ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இணைய வெண்டும். என்னுடைய குடும்பத்தினரும், நண்பர்களும், உறவினர்களும் இஸ்லாமியத்திற்காக வீரமரணம் அடையவதை திருமண விழாக்களை கொண்டாடுவதைப் போல உற்சாகத்துடன் ஏற்க வேண்டும். எண்டு கூறியுள்ளார்.

மேலும் இந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தான் கடந்த 2001ம் ஆண்டு காஷ்மீர் சட்டசபையில் கார் குண்டு தாக்குதல் நடத்தியது. அதில் 37 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

terrorist adil ahmed leaked last video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->