தெலுங்கானா | ஓட்டல் மேலாளர் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி! கிடைத்த 6 குண்டுகள்!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, மதின குடாவில் தனியார் உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்திற்கு தேவேந்தர் கயான் என்பவர் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். 

நேற்று இரவு இவர் மியா போரில் உள்ள பஜாரில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் இவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், தேவேந்தர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். 

இந்த சம்பவத்தால் பஜார் முழுவதும் பரபரப்பு நிலவியது. அங்கிருந்தவர்கள் தேவேந்தர் கயானை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த மடப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அங்கிருந்த 6 துப்பாக்கி குண்டுகளை போலீசார் கைப்பற்றினார். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana hotel manager killed 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->