ஆபாச படங்களைக் காட்டி..! சிறுமியைப் பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள்..!! - Seithipunal
Seithipunal


தற்போது, ஆன்ட்ராய்டு போன்கள் எல்லாம் மலிவாக கிடைப்பதால், சிறுவர்கள் கையில் கூட அவைகள் விளையாடுகின்றன. இந்த போனில், அந்த சிறுவர்கள், தங்களது வயதுக்கு மீறி, ஆபாச படங்களைப் பார்க்கின்றனர்.

இது பற்றி, ஏற்கனவே, பல மனோதத்துவ நிபுணர்கள், சிறுவர்களுக்கு, போன் வாங்கித் தராதீர்கள், என்று கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதைப் பெற்றோர்கள் தான் கேட்பதாக இல்லை. அது ஏற்படுத்தும் விளைவுகள் தான், அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கின்றன.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், புங்கனுார் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் 11 வயது சிறுமியை, அந்தப் பகுதியைச் சேர்ந்த 5 சிறுவர்கள், தங்கள் போனில், ஆபாசப் படங்களைக் காட்டி, ஆசை வார்த்தை காட்டி, அந்த சிறுமியை, கடந்த 3 மாதங்களாகப் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இது பற்றி, அந்த சிறுமி, தன் தாயாரிடம் புகார் அளித்தார். அவர் இந்த செய்தியை, ஊர் மக்களிடம் தெரிவித்தார். அவர்கள், 2 சிறுவர்களைப் பிடித்து, அடித்து உதைத்தனர். இந்த தகவல் அறிந்த புங்கனுார் போலீசார், அந்த சிறுவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மீதம் உள்ள மூன்று சிறுவர்களைத் தேடி பிடித்தனர். இந்த ஐந்து சிறுவர்கள் மீதும், வழக்கு பதிவு செய்து, சித்துார் சிறுவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின் அவர்கள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப் பட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SEXUAL ABUSE A SCHOOL GIRL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->