#ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளின் மறைவிடத்தை அழித்த பாதுகாப்பு படையினர்..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அனந்த்நாக் மாவட்டம் அண்ட்வென் சஹம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான தாக்குதலில் அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், குகை போன்று இருந்த பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Security forces bust terrorist hideout in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->