பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டிற்கு ஜனாதிபதி ஒப்புதல்! விரைவில் அமலாகிறது
Reservation 10 % is Give Permission President
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகவே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எந்த சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.
அதன் அடிப்படையில், முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்து, இது தொடர்பான சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து, மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டிற்கான அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், இடஒதுக்கீடு அமலுக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Reservation 10 % is Give Permission President