''ராகுல் காந்திக்கு அதை மீண்டும் செய்ய தைரியமில்லை'' - ராஜ்நாத் சிங் தாக்கு.!
Rajnath Singh says Rahul Gandhi no courage
கேரளா, பட்டணம்திட்டா தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து மத்திய மந்திரி ராஜநாத் சிங் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பிறகு ராகுல் காந்திக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கான தைரியம் கிடையாது.
அதனால் அவர் உத்தர பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு இடம்பெயர்ந்து விட்டார். வயநாடு தொகுதி மக்கள் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக இயக்க போவதில்லை என முடிவு செய்துவிட்டதாக நான் கேள்விப்பட்டேன்.
நாட்டின் பல்வேறு விண்வெளி ஆய்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் 'ராகுல்யான்' கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்தாமலேயே உள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Rajnath Singh says Rahul Gandhi no courage