அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் இது தான்!! ராகுல் காந்தி அதிரடி!!
Ragul gandhi speech in kerala thiruvanandhapuram
நேற்று நாகர்கோவிலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்ற ராகுல் இன்று பல நிகழ்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி," பாரம்பரியம் மிக்க விஷயங்களான சபரிமலை போன்ற விஷயங்களில் நான் பக்தர்கள் பக்கம் தான் இருப்பேன். இங்கு ஆளும் மாநில கம்யூனிஸ்டும், பாஜகவும் சபரிமலை விவகாரத்தில் இரட்டைவேடம் போடுகிறது.
கேரளாவில் படித்தவர்கள் அதிகம் உள்ளனர். வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர். காங்கிரஸ் இங்கு அயர்ச்சி செய்யும் பட்சத்தில் தொழில்வளம் பெறுக ஏற்பாடு செய்வோம். கேரளாவில் இருந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை துவங்குவோம்.
பாஜக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களே அவரது மீது அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதி. எங்களது ஆட்சியில் மக்களுக்கு நன்மை செய்வோம்" என அவர் பேசியுள்ளார்.
English Summary
Ragul gandhi speech in kerala thiruvanandhapuram