புல்வாமாவை தொடர்ந்து கும்பமேளாவில் குவிக்கப்பட்ட படையினர்!! அதிர்ச்சியில் உறைய வைக்கும் தகவல்!!
police protection for kumbhmela
நேற்று முன்தினம் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நடத்திய கொடூர தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்களை பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அதீத பாதுகாப்பய் ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, மிக அதிகமான கூட்டங்கள் கூடும் இடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பை முன்கூட்டியே ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
இதன்படி, உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் வெகு சிறப்பாக கும்பமேளா நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அனைவரும் அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கும்பமேளாவில் புனித நீராடி கொண்டிருக்கும் அனைத்து பக்தர்களையும் அதிகாரிகள் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், கூடுதல் படைகளும் குவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
பக்தர்களை பாதுகாக்க அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது.
English Summary
police protection for kumbhmela