மும்பையில் பரபரப்பு : சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் - சோதனையில் சிக்கிய போலீசார்.!  - Seithipunal
Seithipunal


மும்பையில் பரபரப்பு : சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் - சோதனையில் சிக்கிய போலீசார்.! 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை ஆர்தர் சாலை சிறையில் கைதிகளுக்கு போதை பொருள் வழங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இந்த நிலையில், கான்ஸ்டபிள் விவேக் நாயக் என்பவர் நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளார். அவரிடம் சிறை வாசல் பகுதியில் வைத்து சோதனை செய்யப்பட்டது. அப்போது, உள்ளாடையில் சோதனையிட அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அவருக்கு மூத்த அதிகாரிகள் முன்னிலையில், சோதனை செய்யப்பட்டதில், அவர் உள்ளாடையில் போதை பொருளை மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. இதன் மூலம் அவர் சிறை கைதிகளுக்கு போதை பொருட்களை வழங்கியது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், அவர் ரஷீத் என்ற கைதிக்கு போதை பொருட்களை சப்ளை செய்ய முயன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து போதை பொருட்கள் அடங்கிய 8 கேப்சூல்கள்  கைப்பற்றப்பட்டது. 

மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஐந்து நாட்கள் காவல் விதிக்கப்பட்டது. மும்பையில் சிறை கைதிகளுக்கு போதை பொருள் வினியோகிப்பில் கான்ஸ்டபிள் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officer arrested for drugs provide to prisoners in mumbai jail


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->