பாலியல் தொல்லைக்கு பாராளுமன்றம் ஒன்றும் விதிவிலக்கல்ல.,புனிதமானதும் இல்லை,ஆதங்கமான ரேணுகா சவுத்ரி..!
நாடாளுமன்றம் புனிதமானது இல்லை என்கிறார் ரேணுகா சவுத்ரி
''பாலியல் தொல்லைக்கு நாடாளுமன்றம் ஒன்றும் விதிவிலக்கானது , என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம்'' அங்கும் பெண்களை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடைபெறுவதாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ரேணுகா சவுத்ரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாகவும், மேலும் பலரிடம் அடிபணிந்து போனால்தான், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதாக தொடர்ந்து பல நடிகைகள் ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்காக #MeToo என்ற ஹேஸ்டேக்கையே உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர்.
பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான், பாலிவுட்டில் நடிகைகள் சம்மதத்துடனேயே பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது, இதனால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது என பேசியது சர்ச்சையாகியது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதை ஆதரித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யும், மூத்த தலைவருமான ரேணுகா சவுத்ரி, ''சினிமா துறையில் மட்டும் பாலியல் தொல்லை நடைபெறுவதில்லை. அனைத்து துறைகளிலும் நடக்கிறது. இது ஒரு கசப்பான உண்மை. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியை இழுத்து உள்ள ரேணுகா சவுத்ரி, “பிரதமர் மோடி எனக்கு எதிராக பாராளுமன்றத்தில் தரக்குறைவான கருத்தை தெரிவித்த போது, ஒரு பெண்ணாக என்னுடைய கண்ணியதை பறித்துவிட்டார்,” என கூறிஉள்ளார்.
நாடாளுமன்றமோ அல்லது மற்ற பணி இடங்களும் பாலியல் தொல்லைக்கு விதிவிலக்கல்ல.இத்தகைய பாலியல் தொல்லைக்கு இந்தியாவே எழுந்து நின்று #MeToo என்று சொல்ல வேண்டிய நிலையில் உள்ளது'' என்றார்.
English Summary
Parliament is no exception for sexual harassment, "said Renuka Chowdhary,