இந்தியாவில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கம்.! இரண்டு வயது குழந்தை பரிதாப பலியான சோகம்.!!
Mumbai earthquake 2 year old child death
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இதனை அறிந்த மக்கள் பெரும் பீதியோடு இருந்து வரும் நிலையில்., மத்திய குழுவானது சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்நிலையில்., மீண்டும் தொடர்ந்து நிலநடுக்கமானது ஏற்பட்டு வரும் நிலையில்., நேற்று அடுத்தடுத்த படியாக காலை சுமார் 6.58 மணியளவில் திடீரென நிலநடுக்கமானது ஏற்பட்டு ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக காலை சுமார் 10.13 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவானது. அதற்கு அடுத்தபடியாக சிறிது இடைவெளியில் காலை சுமார் 10.29 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவு கோலில் சுமார் 3.0 ஆக பதிவானது.
காலைநேரம் என்பதால் வீட்டில் இருந்த மக்கள்., பணிகளுக்கு சென்ற மக்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் இருந்த குழந்தைகள் என அனைவரும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் பதறியபடி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் அங்குள்ள ஒரு குடுமத்தினர் தங்களது குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே வரும் நேரத்தில்., எதிர்பாராத விதமாக குழந்தையுடன் சுவற்றில் மோதியில் சம்பவ இடத்திலேயே குழந்தை சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவமானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
Mumbai earthquake 2 year old child death