அதிகாலையில் கொழுந்துவிட்டு எரிந்த மருத்துவமனை: நோயாளிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


மும்பையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. 

மகாராஷ்டிரா, மும்பையில் உள்ள விக்ரோலி கிழக்கு பகுதியில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 நோயாளிகள் உடனடியாக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. 

பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தினால் உயிர் சேதம் அல்லது காயம் யாருக்கும் ஏற்படவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கு முன்னதாக மும்பையில் மலாட் பகுதியில் உள்ள 22 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai early morning hospital burnt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->