அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரியும் தீ.! பரிதாபமாக பலியான உயிர்கள்.!!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை அடுத்துள்ள செம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் 14 மாடிகளிலும் மக்கள் அவர்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 

இந்த கட்டிடத்தில் உள்ள மேல் தளத்தில் திடீரென தீ பற்றி எரியத்துவங்கியது. இதனை கண்ட மக்கள் அலறியடித்து படி கீழ் தளத்தை நோக்கி விரைந்தனர். இரவு நேரம் என்பதால் சிலர் உறங்கிக்கொண்டு இருந்தனர். 

அங்குள்ள மக்களின் அபய குரலை கேட்டு பதறியடித்த மக்கள் அவர்கள் சுதாரிப்பதற்குள் தீயானது மளமளவென பரவி எரியத் தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் வழங்கினர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த 8 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயானது பல மணி நேரத்திற்கு பின்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீவிபத்தில் கட்டிடத்தின் மேல் தளத்தில் சிக்கி தவித்த மக்கள் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். 

மேலும்., தீயின் தாக்கத்தில் சிக்கி படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MUMBAI DEPARTMENT FIRE ACCIDENT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->