2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்...! சிக்கிய உருக்கமான கடிதம்...! போலீசார் விசாரணை...!
Mother commits suicide with two daughters in Andhra
ஆந்திர மாநிலத்தில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்தவர் சூரிய நாராயணா. இவரது மனைவி விஜயலட்சுமி (55). இவர்களது மகள்கள் சந்திரகலா (33), சவுஜன்யா (29). இவர்களுக்கு திருமணமாகவில்லை. இதில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்த சூரியநாராயணா கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார்.
இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த விஜயலட்சுமி, இரண்டு மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் ரயில் நிலையத்திலிருந்த சக பயணிகள் மற்றும் போலீசார் மூன்று பேரையும் காப்பாற்றினர். பின்பு அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இருப்பினும், மனவேதனையிலிருந்த விஜயலட்சுமி மற்றும் அவரது மகள்கள் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து இவர்களது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது மூன்று பேரும் தூக்கில் தினமாக தொங்கியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் விஜயலட்சுமி அறையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. கணவர் இறந்துவிட்டதால் வேதனையில் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதி இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Mother commits suicide with two daughters in Andhra