யார பார்த்து வரி கேட்டடா.?! ''டோல்கேட்டை'' அடித்து நொறுக்கிய அரசியல் கட்சி தலைவர்.!! வைரலாகும் வீடியோ.!!
யார பார்த்து வரி கேட்டடா.?! ''டோல்கேட்டை'' அடித்து நொறுக்கிய அரசியல் கட்சி தலைவர்.!! வைரலாகும் வீடியோ.!!
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள டோல்கேட்டில் பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ., பி.சி.ஜார்ஜ், டோல்கேட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்மாநிலத்தின் ஜனபக்ஷம் கட்சியின் தலைவராகவும், கோட்டயம் மாவ பூஞ்ஞார் தொகுதியிம் சட்டமன்ற உருபுனராகவும் இருப்பவர் பி.சி.ஜார்ஜ். இவர் அடிக்கடி வில்லங்கமான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கம்.
சில மாதங்களுக்கு முன் தனது துப்பாக்கியை காட்டி ஒருவரை மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு எம்எல்ஏக்கள் விடுதியில் உணவு கொண்டு வர தாமதமானதாக கூறி ஓட்டல் ஊழியரை தாக்கிபரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (16.07.2018) நள்ளிரவு 11.30 மணியளவில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு பி.சி.ஜார்ஜ் தனது ஆடி காரில் சென்று கொண்டிருந்தார். பாலியேக்கரை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான ஒரு டோல்கேட்டில் இருந்த ஊழியர் எம்எல்ஏவிடம் பணம் கேட்டுள்ளார்.
தான் ஒரு எம்எல்ஏ என்றும், பணம் தரமுடியாது என்றும் கூறி, தடுப்பு கட்டையை திறக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் ஊழியர் திறக்க மறுத்து விட்டார். உடனே காரைவிட்டு இறங்கிய பி.சி.ஜார்ஜ் தடுப்பு கட்டையை உடைத்து தூக்கி வீசி எறிந்தார். பின்னர் காரில் ஏறி புறப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.