மனைவியை கொன்று விட்டு மாடியில் இருந்து குதித்த கணவன்!! சிக்கிய நெஞ்சை உருகவைக்கும் கடிதம்!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்தவர் அதுல் உபதேய். இவரது மனைவி மமதா.

இந்த தம்பதியினர் குழந்தை இல்லாத நிலையில் பல ஆண்டுகளாக வருத்தத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் 58 வயது நிறைந்த அதுல் சமீபத்தில் திடீரென தான் தங்கியிருந்த குடியிருப்பின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பின் காவலாளி, இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

மேலும் அவரது குடியிருப்பில் போலீசார் சோதனை செய்தபோது  அவரது மனைவி மற்றும் வளர்ப்பு நாய் இறந்து கிடந்தது. மேற்கொண்டு போலீசார் மேற்கொண்ட  விசாரணையில் அதுல் தன் மனைவியை கொலை செய்து விட்டுதான், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.மேலும் தற்கொலை செய்து கொண்ட அதுலின் உடம்பிலிருந்து கடிதம் ஒன்று சிக்கியது.

 அதில் என்னுடைய மனைவி புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். மேலும் புற்றுநோய் மிகவும் ஆபத்தானது. அதனை குணப்படுத்த முடியாது. எனவே தான் இந்த முடிவு எடுத்துள்ளேன் என எழுதியுள்ளார்.
இந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man killed wife and commits suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->