சிறு சிறு துண்டுகளாக கழிவுநீரில் மிதந்த மனித பாகங்கள்! விசாரணையில் அம்பலமான நண்பனின் கொடூரச்செயல்!
man killed and cut his friend parts of body for money
பால்கர் மாவட்டம் விரார் மேற்கு எவர்சைன் அவென்யூ பகுதியில் பச்ராஜ் பாரடைஸ் என்ற அடுக்குமாடி கட்டத்தில் கடந்த சில நாட்களாக மிகமோசமான துர்நாற்றம் வீசியது.
இந்தநிலையில், கட்டிடத்தில் உள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. அதனால் குடியிருப்புவாசிகள் கழிவுநீர் குழாயை சுத்தம் செய்வதற்காக மாநகராட்சிக்கு தகவல் கொடுத்த நிலையில் தொழிலாளர்கள் வந்து பார்த்தபோது கழிவுநீரில் 3 மனித விரல் துண்டுகள் மிதந்து கொண்டுள்ளது.
இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் கழிவு நீர் குழாய்க்குள் மனித உடல் பாகங்கள் துண்டு, துண்டாக சிக்கியது. மேலும் அங்குள்ள சாக்கடையிலும் மனித உடல் பாகங்கள் மிதந்துள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மனித உடல் பாகங்கள் அனைத்தும் 6-வது மாடியில் உள்ள 602-ம் எண் வீட்டில் உள்ள கழிவுநீர் குழாய் வழியாக போடப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த வீட்டில் மும்பை சாந்தாகுருஸ் வகோலாவை சேர்ந்த பிண்டு சர்மா என்பவர் வசித்து வந்துள்ளார்.அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
அதாவது பிண்டு சர்மா பங்கு தரகராக உள்ளார். இவரது நண்பர் கணேஷ் கோலட்கர். அச்சகம் நடத்தி வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன் பிண்டு சர்மாவிடம் கடனாக ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார். அதில், ரூ.40 ஆயிரத்தை மட்டும் கணேஷ் கோலட்கர் திருப்பி கொடுத்துள்ளார். மீதி 60 ஆயிரத்தை கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் பிண்டு சர்மா, கணேஷ் கோலட்கரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு இருவருக்கும் இடையே கடன் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பிண்டு சர்மா கணேஷ் கோலட்கரை பிடித்து தள்ளியுள்ளார். இதில், தரையில் மோதி தலையில் படுகாயம் அடைந்த கணேஷ் கோலட்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிண்டு சர்மா நடந்ததை வெளியில் சொல்லாமல், கணேஷ் கோலட்கரின் உடலை வீட்டுக்குள்ளேயே வைத்து ஆக்சாபிளேடால் சிறுசிறு துண்டாக வெட்டியுள்ளார்.
மேலும் பின்னர் அந்த துண்டுகளை கழிவறைக்குள் கொட்டி தண்ணீரை ஊற்றியுள்ளார். இதில், அந்த உடல் துண்டுகள் குழாயில் அடைத்துக்கொண்டன.
இந்நிலையில் இனி மற்ற உடல் பாகங்களை அங்கு போட முடியாதநிலையில், அவற்றை ஒரு பையில் மூட்டைக்கட்டி அருகே உள்ள சாக்கடையில் வீசியுள்ளார்.பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் பிண்டு சர்மாவை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணப்பிரச்சினையின் காரணமாக நண்பரை கொன்று அவரது உடலை ஆட்டுக்கறி போல சிறு சிறு துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man killed and cut his friend parts of body for money