இளைஞரின் உயிரை பறித்த விளையாட்டு காரியம்.! வீடியோ காலில் ஒத்த நொடியில் நேர்ந்த துயரம்!! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் கடுமையான குடிபோதையில் இருந்துள்ளார். அப்பொழுது தனது நண்பர்களை விளையாட்டாக பயமுறுத்த நினைத்துள்ளார்.

அதனால் அவர் வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்தநிலையில், மின்விசிறியில் சேலையைத் கட்டி, அதனை தனது கழுத்தில் மாட்டிக்கொண்டுள்ளார்.
பின்னர் தனது நண்பரை வீடியோ காலில் அழைத்து அவரை விளையாட்டாக மிரட்டியுள்ளார்.
அப்பொழுது அதிக போதையில் தடுமாறிய அவர், நிலைகொள்ள முடியாமல் உண்மையிலேயே துடிதுடிக்க தூக்கில் தொங்கியுள்ளார் . 

மேலும் கழுத்தில் கட்டியிருந்த சேலை பயங்கரமாக இறுக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே மெக்கானிக்  உயிரிழந்துள்ளார்.

இதனை கண்டு வீடியோகாலில் இருந்த நண்பர் கதறியுள்ளார். பின்னர் அவசர அவசரமாக அவர் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு  காவல்துறையினர் விரைந்துள்ளனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது. 

இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனமான 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man dead while cheating friend in video call


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->