மும்பை அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை - விசாரணையில் சிக்கிய முதலாளி.!
man arrested for murder case in mumbai
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, மும்பை போரிவலி மேற்கு ரயில் நிலையம் அருகே நேற்று இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதையறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அதில், உயிரிழந்தவரின் பெயர் பங்கஜ் மண்டல். அவர் அருகில் உள்ள காய்கறி சந்தையில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது ஒரு கடையில் ரூ.6 ஆயிரத்து 400 மதிப்புள்ள பூண்டு மூட்டையைத் திருடியுள்ளார்.
இதனைப் பார்த்த காய்கறி கடை உரிமையாளரான கன்ஷியாம் ஆக்ரி, பங்கஜ் மண்டலை சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த சடலத்தை போரிவலி ரயில் நிலையம் அருகே அவர் வீசிச் சென்றது" தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கன்ஷியாம் ஆக்ரியை கைது செய்தனர். மும்பையில் பூண்டு மூட்டையைத் திருடிய தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் போரிவலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for murder case in mumbai