காதலர் தின கொண்டாட்டம்! பூங்காவில் தனியாக இருந்த காதல் ஜோடிக்கு, மர்ம இளைஞர்களால் நேர்ந்த தரமான சம்பவம்! வைரலாகும் வீடியோ.!
lovers got marry in park viral video
தெலுங்கானா மாநிலம் மெட்சால் பகுதியில் கண்ட்லகோயா ஆக்சிசன் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அங்கு காதலர் தினத்தை முன்னிட்டு இன்று ஏராளமான காதல் ஜோடிகள் வருகை தந்தனர்.
இந்நிலையில் காதல் ஜோடி ஒன்று அங்கு தனியாக இருந்துள்ளது. அப்பொழுது அங்கு வந்த பஜ்ரங் தால் என்கிற இந்து அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவர்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி தாலி கட்டவைத்துள்ளனர்.
மேலும் அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டனர்.
மேலும் பஜ்ரங் தால் அமைப்பினர் ஏற்கனவே காதலர் தினத்தில் யாரேனும் ஜோடியாக இருந்தால் அவர்கள் தாலி கட்ட வைப்போம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் அந்த வீடியோவில் இருந்த ஜோடியினர் விருப்பத்துடன் தாலி கொண்டதாக தெரிவதால், இதுவரை எந்த வழக்கும் பதியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
lovers got marry in park viral video