கைகள் கட்டப்பட்ட நிலையில் ஜோடியாக ஆற்றில் மிதந்த சடலங்கள்! சிக்கிய கடிதத்தால் அதிர்ச்சி அடைந்த போலீசார்!! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கமலேஷ் 27 வயது நிறைந்த இவர் 16 வயது மிக்க ஸ்வேதா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார் . இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து, எதிர்த்த நிலையில் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

 மேலும் இதனால் மனஉளைச்சலில் இருந்த இருவரும் தங்களது இருவரது கைகளையும் ஒன்றாக கட்டிக்கொண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று சபர்மதி ஆற்றின் வழியாக சென்ற நபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில், ஜோடியாக சடலங்கள் மிதப்பதை கண்டுள்ளார்.

 உடனே அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆற்றிலிருந்து இறந்த நிலையில் மிதந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் கமலேஷின் சட்டைப் பையில் இருந்த ஆதார் அட்டையை கைப்பற்றி, அவரது குடும்பத்தாருக்கு தகவல் அளித்து வரவழைத்தனர்.

 இதற்கிடையில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்று ஆற்றின் முகப்பு பகுதியில் கிடந்ததாக கூறி அங்கு வேலை செய்யும் காவலாளி ஒருவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். அதனை அவர்கள் ஆராய்ந்து பார்த்த நிலையில் உள்ளே கடிதம் ஒன்று  இருந்துள்ளது.

 அந்த கடிதத்தில்,என்னுடைய சகோதரியை பார்க்கச் சென்ற இடத்தில் எனக்கும் ஸ்வேதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நாங்கள் இருவரும் ஒரு வருடமாக காதலித்து வருகிறோம். ஆனால் எங்களுடைய காதலுக்கு எங்களது இரு குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்து எதிர்க்கின்றனர் என்று எழுதியுள்ளனர்.

 இதனை தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இரு குடும்பத்திடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lover suicide in gurajat river


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->