சபரிமலையில் நாளை மகரஜோதி! பலத்த பாதுகாப்பு ஏற்பாடு! - Seithipunal
Seithipunal


கேரளா சபரிமலையில் நாளை மகரஜோதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கேரள மாநில காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 

கேரளா சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைய இத்தனை வருடங்களாக உள்ள  தடையை நீக்கி,  கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
        
இந்த தீர்ப்புக்கு தமிழகம் மற்றும் கேரளா மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத வழிப்பாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும், ஆக விதிப்படி தான் அனைத்தும் நடக்க வேண்டும் என்றும் மக்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. தொடர்ந்து பல பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டது. ஒரு சில பெண்களே ஐயப்பனை தரிசனம் செய்தனர். 

இந்தநிலையில், சபரிமலையில் நாளை பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணிக்கு மகரஜோதி தெரியும். இதனை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர்.  

அந்த வகையில், ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த பூஜையையொட்டி ஐயப்ப பக்தர்கள் சுமார் 18 லட்சம் பேர் நாளை சபரிமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்காக 6000 அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பலத்த பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala sabarimala Tomorrow Magaraothi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->