மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சரமாரி வெட்டி கொலை: மர்ம நபர்கள் ஆவேச செயல்!
Kerala cpim Party leader hacked death
கேரளா, கோழிக்கோட்டில் உள்ள செரியபுரம் கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு நகர மத்திய உள்ளூர் குழு செயலாளர் பி.வி. சத்யநாதன் (வயது 62) பங்கேற்றார்.
இந்நிலையில் நேற்றிரவு சத்யநாதனை மர்மகும்பல் கொடூரமாக வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்யநாதனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருப்பினும் சத்யநாதர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அவரது உடலில் நான்கு இடங்களில் கோடாரியால் வெட்டப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சத்தியநாதன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
English Summary
Kerala cpim Party leader hacked death