அடியோடு கருவறுக்கப்பட்டனர்.. 100 மணி நேரத்தில் பழி தீர்த்த இந்திய இராணுவம் - சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்.!
Kashmir-JeM-leadership-has-been-killed-within-100-hours
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் 54 பட்டாலியன் படை பிரிவின் 2500 வீரர்கள் 70 வாகனங்களில் சென்ற கான்வேயில் இரண்டு பஸ்சில் மற்றொரு வாகனம் மோதி வெடிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாகனம் முழுதும் வெடிமருந்து நிரப்பி எதிரில் வரும் வாகனத்தை மோதச் செய்து சிதறடிக்கும் உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.
வீரர்களின் மரணம் வீண் போகாது என்று பிரதமர் மோடி தாக்குதல் நடந்த உடனேயே தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இந்திய இராணுவத்தின் கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு சில முக்கிய முடிவுகள் தன்னிச்சையாக எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிக்கப்பட்டது என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சுமார் 16 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ஜெய்ஷ்-இ- முகமது இயக்க மூத்த தளபதி கம்ரான் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சரணடையுங்கள், அல்லது நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள் என புல்வாமா என்கவுண்டருக்கு பிறகு இந்திய இராணுவம் பயங்கரவாதிகளை எச்சரித்து உள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிக்கப்பட்டது. 100 மணி நேரத்தில் பழி தீர்த்துவிட்டதாகவும் இந்திய ராணுவம் அறிவித்து உள்ளது.
English Summary
Kashmir-JeM-leadership-has-been-killed-within-100-hours