விமானப்படை கால்வாய் மீது பயங்கர தாக்குதல்.. ஒருவர் பலி.. ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய விமான படையைச் சேர்ந்த வீரர்கள் சென்ற கான்வாய் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இந்த சம்பவத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் ஐந்து விமானப்படை வீரர்களுக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஷ்ட்ரிய ரைப்பில் பிரிவு அதிகாரிகள் அப்பகுதியை சுற்றி வளைதது தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதேபோன்று ஷாசிதார் பகுதியில் உள்ள விமானப்படைத்தளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Airforce Soldier died in terrorist attack


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->