கள்ளகாதலனுடன் உல்லாசம் அனுபவித்த மனைவியை கண்டுகொண்ட கணவன்.! உல்லாசத்தின் போதே அடித்து துவைத்ததில் நேர்ந்த துயரம்.!!
in odisha illegal affair end husband killed wife and her illegal friend
இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் இருக்கும் பலாசூர் பகுதியில் உள்ள துர்க்காதேவி கிராமத்தை சார்ந்தவர் கைலாஷ் சந்திரா. இவரது மனைவியின் பெயர் லட்சுமி பிரியா (வயது 32).
இவர்கள் இருவரும் தங்களின் சொந்த கிராமத்தை விட்டு அங்குள்ள சகாதேவ்குண்டா என்ற கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., கைலேஷிர்க்கு பணி ஏதும் இல்லாததால்., அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
கணவன் வீட்டிலேயே இருந்ததை அடுத்து., வீட்டின் நிலையை உணர்ந்து லட்சுமி பிரியா அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நேரத்தில் கள்ளக்காதல் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில்., இவரின் கள்ளக்காதலை அறிந்த கணவர் அவரை கையும் களவுமாக பிடிப்பதற்கு காத்திருந்துள்ளார். இந்த நேரத்தில்., ராணிபாட்னா பகுதியில் இருக்கும் வீட்டில் லட்சுமி ஆண் நண்பருடன் படுக்கையில் உல்லாசமாக இருப்பதை கண்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கைலேஷ்., அவர்கள் இருவரையும் அடித்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி இவர்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்த சமயத்தில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரின் பெயர் பிரதீப் என்பதும் தெரியவந்தது. இது குறித்து தீவிர விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in odisha illegal affair end husband killed wife and her illegal friend