இந்தியாவில் சைலண்டாக அரங்கேறும் மனித கரு கடத்தல்.! கைதான நபர் தெரிவித்த அதிர்ச்சி காரணம்.!! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!
in mumbai man arrested due to fetal kidnapping
இந்தியாவில் இருக்கும் மும்பை நகரில் உள்ள விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரை கண்டு விமான நிலைய அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளார்.
இவர்களின் சந்தேகத்தை தீர்ப்பதற்காக அவர்கள் இருவரையும் விமான நிலைய அதிகாரிகள் அழைத்து சென்று சோதனை செய்யத்தில்., அவர்கள் மனித கருவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும்., அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்., மலேசியாவில் இருக்கும் ஹார்ட் ஏ.ஆர்.டி என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும்., இந்த நிறுவனத்தை பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த தம்பதியினர் நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில்., மேற்கொண்ட ஹார்ட் எ.ஆர்.டி நிறுவனமானது வாடகை தாய் மற்றும் கருதானம் போன்ற பல்வேறு சேவையை செய்து வரும் நிலையில்., சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு மனித கருக்களை கடத்தி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாது இவர்கள் இந்தியாவை தேர்வு செய்ததன் காரணமாக இந்தியாவில் வாடகை தாய்., குழந்தை பேரு மற்றும் செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்ற பணிகளுக்கு செலவு குறைவானது என்ற காரணத்தால்., பல்வேறு தம்பதிகள் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்.
இதனை சில தனியார் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாத்தித்து வருகிறது. மேலும்., கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 10 முறை இந்தியாவிற்கு இது தொடர்பாக வந்து சென்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
in mumbai man arrested due to fetal kidnapping