திருமணம் முடிந்து கழுத்தில் இருந்த பூ மாலை வாடுவதற்குள் மணமகன் எடுத்த விபரீத முடிவு.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in Mumbai a new married husband attempt suicide
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பையை சார்ந்தவர் ஜீவன் போசலே (வயது 28). இவருக்கும் அதே பகுதியை சார்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி., நேற்று முன்தினம் அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று., தங்களின் இல்வாழ்க்கைக்குள் இருவரும் நுழைந்தனர். திருமணம் முடிந்த மறுநாளில் வீட்டில் இருந்த யாரிடமும் கூறாமல்., அவரது வாகனத்தை எடுத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் இல்லத்திற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்., அவரை பல இடங்களில் தேடியலைந்தனர். இவர் எங்கும் காணாததால் பதற்றமடைந்த குடும்பத்தினருக்கு., அங்குள்ள முகுந்தவாடி இரயில் நிலையத்திற்கு அருகில் அவரது வாகனம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தகவலை அறிந்ததும் உடனடியாக அங்கு விரைந்த குடும்பத்தினர் அங்குள்ள காவல் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது., மர்ம நபர் ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை தெரிவித்து உள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரது உடலை கண்டு கதறியழுத்தனர். மேலும்., திருமணம் முடிந்த மறுநாளே மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கேட்டு., மணப்பெண்ணும் மணப்பெண் வீட்டாரும் செய்வதறியாது திகைத்து போனார்கள்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in Mumbai a new married husband attempt suicide