அலுவலகத்திலேயே மனைவியை துடிதுடிக்க இரத்தத்தில் மிதக்கவிட்ட கணவன்.! கதறிய மனைவி., அதிர்ச்சியில் பணியாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் பயந்தர் முர்தா பகுதியை சார்ந்தவர் குமார் போயர் (32). இவரது மனைவியின் பெயர் வீனா (வயது 35). வீனா அங்குள்ள தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். 

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வீணாவின் மீது அதிகளவு சந்தேகத்தில் இருந்து வந்த காரணத்தால் அடிக்கடி சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தொடர்ந்து மனைவி வீணாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒரு சமயத்திற்கு மேலாக இந்த விஷயத்தை பொறுக்க முடியாமல் வீனா வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது மனைவியை கொலை செய்யும் நோக்கில் இருந்துள்ளார். 

இன்று காலை அவர் அலுவலகத்திற்கு வந்ததை அறிந்த குமார்., அங்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளர். அங்குள்ள ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 

எந்த விதமான சமாதானத்திற்கும் உள்ளாவாத அவர்., மறைத்து வைத்திருந்த கத்தியால் வீணாவை குத்தியுள்ளார். இதில் நிலைதடுமாறிய அவர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வீழ்ந்தார். 

இவரை மீட்ட பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே., அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வீணாவின் உடலை பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைத்தனர்., மேலும்., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai a husband killed her wife


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->