பணியிடத்தில் மலர்ந்த கள்ளக்காதல்.! பண்ணை வீட்டில் கொண்டாட்டம்., கள்ளக்காதலன் நண்பர்களால் துடிக்கத்துடிக்க அரங்கேறிய கொடூரம்.!!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கும் மான்கூர்டு பகுதியை சார்ந்தவர் ரோகினி (28)., கணவரை இழந்து வாழ்ந்து வரும் இவர்., நவி மும்பையில் இருக்கும் மாநகராட்சி மருத்துவனையில் பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் 14 நவம்பர் அன்று பணிக்கு சென்ற இவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்பதால்., இவரை தேடி பார்த்த ரோகிணியின் சகோதரர் ராஜேந்திர விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., ரோகிணியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வங்கிக்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., ரோகிணியுடன் சக ஊழியராக பணியாற்றி வரும் சுனில் சிர்கே (வயது 44) என்பவர் ரூ.65 ஆயிரத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. 

இதனையடுத்து சுனிலை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பின்னர் ரோஹிணியை கொலை செய்தது தெரியவந்தது. ரோகினி மற்றும் சுனில் சிங்கேவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில்., ரோகினி தொடர்ந்து சுனிலை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஏற்க மறுத்த சுனில் தொடர்ந்து தட்டிகழித்து வந்துள்ளார். ரோகிணியின் தொல்லையை ஒரு சமயத்திற்கு மேலாக தாங்க முடியாமல் அவரை தீர்த்துக்கட்டும் முடிவுக்கு வந்துள்ளார். இதனால் சுனிலின் திட்டப்படி ரோஹிணியை சுற்றுலாவிற்கு சென்று வரலாம் என்று சத்தாராவில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

பண்ணை வீட்டிற்கு முன்னதாகவே வருகை தந்திருந்த சுனிலின் கூட்டாளிகள் விஜய் சிங்., ராமச்சந்திர ஜாதவ் ஆகியோரின் உதவியுடன் அவரை மம்பட்டியால் தாக்கி., குழி தோண்டி அவரை துடிக்கத்துடிக்க புதைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் காவல் துறையினரின் விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai a girl killed by illegal affair boy friend and her friend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->