பிரியாணியை வழங்கி 5 சிறுமிகள் பலாத்காரம்.! காப்பகத்தில் அரங்கேற்றிய கொடூரம்.!! அடுத்தடுத்து வெளியான பேரதிச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் இருக்கும் குந்தாபுரா தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த குழந்தைகள் பெற்றோரை இழந்து வசித்து வருகின்றனர். 

இந்த காப்பகத்தின் செயலாளராக கேசவா கோட்டேஷ்வர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த காப்பகத்திற்கு வருகை தந்த மங்களூரு பகுதியை சார்ந்த தம்பதி குழந்தையை தத்தெடுக்க சென்று., அந்த நிறுவனத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு சிறுமியை தத்தெடுத்துள்ளார். 

சிறுமியை தத்தெடுத்த தம்பதியினர் இல்லத்திற்கு சிறுமியை அழைத்து சென்ற நேரத்தில் இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். 

இதற்கு பின்னர் சிறுமியை மீண்டும் காப்பகத்தியிலேயே கொண்டு சென்று சேர்த்துள்ளார். இந்த சூழ்நிலையில்., காப்பகத்தில் இருந்த சிறுமி அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று தம்மை தத்தெடுத்த தம்பதியினரிடம் சேர்த்து விடுமாறு கூறியுள்ளனர். மேலும்., காப்பகத்திற்கு செல்ல காவல் துறையினர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்து., காப்பகத்தில் நடைபெறும் சம்பவங்களை கூறியுள்ளார்.  

காப்பகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் ஹனுமந்தப்பா என்பவன்., அங்கு தங்கியிருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கியது மட்டுமல்லாது., கொடூரமாக வலுக்கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக காப்பகத்திற்கு சென்று ஹனுமந்தப்பாவிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., இந்த காப்பகத்தில் பல குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். சில சிறுமிகளுக்கு ஆசை வார்த்தை கூறி பிரியாணி போன்ற உணவு பொருட்கள் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளான். மேலும்., சில சிறுமிகளை பலாத்காரம் செய்துள்ளான். இந்த விஷயத்தில் காப்பகத்தின் செயலாளருக்கும் தொடர்பு இருப்பதும்., 5 பெண்களை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த நிலையில்., இது குறித்து யாரிடமும் கூற கூடாது என்று மிரட்டலும் விடுத்துள்ளனர். 

இவர்கள் இருவர் மட்டுமல்லாது., கேசவாவின் நண்பர்களின் காம பசிக்கும் தீனி பெறுவதாக கூறி சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்ததும் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga state child care organization members rapped girl child


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->