வறுமையில் வாடிய சிறுமிக்கு வேலை வாங்கி கொடுத்து பலவந்தப்படுத்திய துயரம்.! கொடூர செயலை அரங்கேற்றியதில் நேர்ந்த விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டத்தை சார்ந்தவர் சந்திரசேகர் (வயது 60). இவர் கிராம பஞ்சாயத்து உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அங்குள்ள கிராமத்தில் சொந்தமாக தேநீர் கடை ஒன்றை நடத்தி வரும் இவர்., கடையை கவனித்து கொள்ள ஆட்கள் தேடியுள்ளார். 

அந்த சமயத்தில் வறுமையில் வாடிய சுமார் 14 வயதுடைய சிறுமியை கண்ட இவர்., தேநீர் கடையின் பணியை கூறி பணிக்கு வந்தால் சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். வறுமையில் வாடி வந்த சிறுமி வேலைக்கு சென்றால் நமது குடும்பத்தார்கள் கொஞ்சம் சிரமப்படாமல் இருப்பார்கள் என்று எண்ணியுள்ளார். 

பின்னர் அந்த தேநீர் கடையில் பணிக்கு சேர்ந்த சிறுமிக்கு நாளொன்றுக்கு சுமார் ரூ.25 முதல் ரூ.50 வரை வழங்கியுள்ளார். சிறுமி கடையில் பணியாற்றி வந்த நிலையில்., வீட்டில் வேலை இருப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

வீட்டிற்குள் சிறுமி வந்ததும் கதவை அடைத்த நிலையில்., பதறிப்போன சிறுமி சத்தமிடவே அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாத சூழ்நிலையில்., சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

மேலும்., சிறுமிக்கு ரூ.50 ஐ வழங்கி இது குறித்து யாரிடமும் கூறினால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து போன சிறுமி., இது குறித்து யாரிடமும் கூறாமல் இருக்கவே., இதனை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு சுமார் 4 மாதங்கள் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில்., சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் சிறுமியை அழைத்து கொண்டு மருத்துவமனையில் சோதனை செய்துள்ளார். மருத்துவர்கள் சிறுமிக்கு செய்த சோதனையில்., அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சியான தாயார் சிறுமியிடம் கேட்ட போது., தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறியழுத்துள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., சந்திரசேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga a girl rapped by 60 year old man and now he is pregnant


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->