வெளிநாட்டில் வருடக்கணக்கில் பணி.! ஊருக்கு திரும்பி வந்து மனைவியை அறையெடுத்து கொலை செய்த கணவன்.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கட்வல் பகுதியை சார்ந்தவர் ரஹீம். இவரின் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் துபாய் நாட்டிற்கு பணிக்காக சென்றுவிட்டார். வெளிநாட்டில் கடுமையான பணியை குடும்பத்திற்க்காக உழைத்து கொண்டு., மாதம் மாதம் பணம் அனுப்பி வைத்துள்ளார். 

இதனையடுத்து கிடைக்கும் சமயங்களில் தனது மனைவியிடம் அலைபேசியில் பேசுவது உண்டு. அந்த வகையில்., பல முறை மனைவியை தொடர்பு கொண்ட சமயங்களில் அலைபேசி பிசி என்று வந்துள்ளது. 

பின்னர் பேசும் சயமத்தில் இது குறித்து ரஹீம் கேட்கும் போது எதையாவது கூறி சமாளித்து விடுவார்., அந்த வகையில் சிறிது நாட்களுக்கு பின்னர் சந்தேகம் ஏற்பட்ட நிலையில்., தனது மனைவியின் நடவடிக்கை குறித்து விசாரித்துள்ளார். 

அந்த சமயத்தில்., அவருக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்து உடனடியாக ஊருக்கு வந்து மனைவியை கொலை செய்யும் நோக்கில் இருந்துள்ளார். 

அதன் படி., கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஹைதராபாத்துக்கு வருகை தந்து அங்குள்ள விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார். இந்த செய்தியை தனது மனைவிக்கு தெரிவித்து அங்கு வரசொல்லியிருக்கிறார். 

இதனை அறிந்த ரஹீமின் மனைவி உடனடியாக விடுதிக்கு வந்துள்ளார். அங்கு ரஹீமின் அறையில் வைத்து இருவரும் பிரச்சனை குறித்து பேச தொடங்கியுள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே வாக்குவாதமான முற்றவே., ரஹீம் தனது மனைவியை கொலை செய்துள்ளார். 

ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரஹீமின் மனைவி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Hyderabad husband killed her wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->