காதல் மனைவியுடன் இல்லற வாழ்க்கை.! நான்கு மாத குழந்தையுடன் மனைவியை துடிதுடிக்க செய்த கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வருபவர் ரமேஷ் (34). அதே பகுதியை சார்ந்த பெண் சுசித்ரா (வயது 28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., இவர்களின் காதலானது இருவரின் இல்லத்தினருக்கும் தெரியவந்துள்ளது. 

இவர்களின் காதலுக்கு இல்லத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து., கடந்த 2015 ம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டு., ஐதராபாத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் தொடங்கிய சில நாட்களுக்கு பின்னர் இவருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்., 8 மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட பிரச்சனைக்கு பின்னர் சுசித்ரா தனது தாயாரின் இல்லத்தில் இருந்துள்ளார். தனது மனைவியிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் தனது இல்லத்திற்கு அழைத்து வந்துள்ளார். 

சுசித்ரா தனது நான்கு மாதமான கை குழந்தையுடன் இல்லத்திற்கு வந்த சில மணித்துளிகளில்., மீண்டும் வழக்கம் போல தரரு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான சுசித்ரா மயக்க மாத்திரையை பாலில் கலந்து அவரும் குடித்துவிட்டு., குழந்தைக்கும் வழங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனை கவனித்த ரமேஷ் எந்த விதமான பதட்டமும் இல்லாமல்., தனது மோட்டார் வாகனத்தில் இவர்கள் இருவரும் மயக்கமடைந்த நிலையில் கொண்டு சென்றுள்ளார். அங்குள்ள வெட்டவெளி பகுதிக்கு குழந்தை மற்றும் மனைவியை கொண்டு சென்று இருவரையும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். 

அரை மயக்கத்தில் தீயின் வெப்பம் தாங்க இயலாமல் மனைவி மற்றும் நான்கு மாத குழந்தை அலறி துடித்ததை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சுசித்ரா மற்றும் குழந்தையின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in hyderabad a husband killed her wife and cute baby


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->