துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடந்து கொண்டு வருகிறது., அந்த வகையில் நடைபெறும் அநீதிகளுக்கு மத்தியில் பெண்கள் தங்களின் வாழ்க்கையை கடும் போராட்டத்திற்கு முன்னிலையில் நகர்த்தி வருகின்றனர். 

பணிகளுக்கு கல்லூரிகளுக்கு செல்லும் பெண்கள் வேலைக்கு செல்லும் வழியிலும் கல்லூரியில் பயிலும் நேரங்களிலும் என்ற பல இடத்திலும் அவர்களுக்கு பாலியல் தொல்லைகள் மற்றும் அத்துமீறல்கள்  பிரச்சினை நடப்பது கடந்த சில வருடங்களாக வாடிக்கையாகிவிட்டது. 

பெண்கள் வெளியே செல்லவே பயப்பிடக்கூடிய நிலை மீண்டும் தற்போது தலைதூக்கி உள்ளது. அந்த வகையில்., பீகாரில் நடைபெற்ற ஒரு கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் உள்ள பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் வசித்து வருகிறார். 

இவர் அங்குள்ள பகுதியில் வெளியே சென்று வருவதற்கு பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில்., இவரை பின் தொடர்ந்த வாலிபர்கள் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழிக்கும் முயற்சியில் அவரை மிரட்டியுள்ளனர்., இதனால் பதறிப்போன அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பிக்க கடும் போராட்டம் நடத்தியுள்ளார். 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த வாலிபர்கள் பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்., முகத்தில் ஆசிட் வீசியதில் மாணவி அலறி துடித்துள்ளார்., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் விஷயம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கும் அவசர ஊர்தியினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவியை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து., பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் துவங்கினர். அந்த விசாரணையில்., அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் அதில் மாணவியிடம் அத்துமீற முயன்றதும் பின்னர் அந்த நேரத்தில் மாணவியின் பெரும் போராட்டத்திற்கு பின்னர் ஆசிட் வீசியது தெரியவந்தது. 

இது குறித்த தகவல்கள் அங்குள்ள ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்., பாதிக்கப்பட்ட பெண் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., பெண்ணை கற்பழிக்க முடியாத ஆத்திரத்தால் அவர் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in bihar girl try to rap and acid through her face by a gang when failed rap


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->