32 பெண்களை காதலன் முன்னிலையில் பலவந்தமாக கொடூர முறையில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.!! வெளியான பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கோதாவரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பவுத்தராம குகைக்கோயில் பகுதியில் சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். மேலும்., இந்த இடத்திற்கு அதிகளவில் காதல் ஜோடிகள் வந்து செல்வது வழக்கம். 

இந்த குகைப்பகுதியானது ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும் பகுதி என்பதால்., உல்லாசமாக இருக்க விரும்பும் தம்பதியினர் மற்றும் காதல் ஜோடிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த குகை பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அதே பகுதியை சார்ந்த நவீன் - ஸ்ரீ என்கிற இளம் காதல் ஜோடி வருகை தந்தனர். 

இந்த சமயத்தில் அங்கு இருந்த மர்ம கும்பலை சார்ந்த நால்வர் நவீனை அடித்து விட்டு., ஸ்ரீயை கொடூர முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி., இவர்கள் இருவரையும் கொலை செய்யும் நோக்கில் தாக்கிவிட்டு தப்பியோடினர். 

இந்த சம்பவத்தில் அதிகளவு இரத்த போக்கின் காரணமாக ஸ்ரீ பரிதாபமாக உயிரிழக்க., உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நவீனை கண்ட மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தீவிர சிகிச்சை பிரிவில் நவீன் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பத்திவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., பொட்லுரி மற்றும் அவனது கூட்டாளிகளான சோமையா., கங்கையா மற்றும் நாகராஜ் என்பவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., இது போன்று சுமார் 32 பெண்களை பலவந்தமாக மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதும்., சுமார் 3 ஆண்கள் மற்றும் 1 பெண்ணை கொடூர முறையில் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் படி பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற தகவல் வெளியாகாத நிலையில்., இவர்கள் நால்வரும் சுமார் 20 வயது கூட பூர்த்தியாகாத இளைஞர்கள் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in andra 32 girls rapped and 4 persons killed by a gang


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->