மனைவி அழகா இருந்ததாலும், தன்னைவிட 20 வயது குறைவு என்பதாலும் இவ்வாறு செய்தேன்!. அதிர்ச்சி சம்பவம்!.
மனைவியின் வயது தன்னைவிட 20 வயது குறைவு என்பதால்நடந்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பெங்களூரை சேர்ந்தவர் ஜகதீஷ் 45 வயது நிரம்பிய இவருக்கு சவுமியா என்ற 25 நிரம்பிய மனைவி இருந்துள்ளார். ஜகதீஷை விட சவுமியா வயது குறைவானவர் என்ற நிலையில் சமீபகாலமாக மனைவி நடத்தையின் மீது ஜகதீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து யாருடனாவது தொடர்பு வைத்துள்ளாயா என கூறி சவுமியாவுடன் ஜகதீஷ் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதே போல தினமும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று வழக்கம்போல் சண்டைபோட்டு சவுமியாவின் தலையை தரையில் வேகமாக மோதிய ஜகதீஷ் பின்னர் அவர் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.
பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்த ஜகதீஷ் நடந்த அனைத்தையும் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கட்டிய மனைவி இளம் வயதாகவும், அழகாகவும் இருந்ததால் மனைவியை கணவனே துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம், அப்பகுதியினரிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
English Summary
husbund killed his wife for her young age